×

ஆன்லைன் வகுப்பின் போது ஆபாசமாக படம் பிடித்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு!: ஆசிரியர் ராஜகோபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக் தகவல்..!!

சென்னை: ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போலீசார் விசாரணையில் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே.கே. நகரில் உள்ள  பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் பாடம் எடுத்து வந்த  அவர், ஆன்லைன் வகுப்பில் அரை நிர்வாணமாக தோன்றி இரட்டை அர்த்தத்தில் பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரித்த போது, பல ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
இந்நிலையில் ராஜகோபாலனை 3 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.  அவரது செல்பேசியில் அழைக்கப்பட்டு வாட்ஸ் அப் உரையாடல் மற்றும் படங்களை மீட்டெடுப்பது அதன் அடிப்படையிலும், மாணவிகளின் புகார் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளை ஜூம் செய்து ஆபாசமாக படம் பிடித்து ரசித்ததாகவும், படங்களை ஆபாசமாக எடிட் செய்து மாணவிகளுக்கு அனுப்பியதும் தெரியவந்துள்ளது. 
போலீஸ் காவல் இன்று மாலை 3 மணியோடு முடிவடைய உள்ள நிலையில், இன்று மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். ராஜகோபாலன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இன்னும் சில ஆசிரியர்கள் விரையில் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவிகள் பலமுறை புகார் அளித்தும் அலட்சியப்படுத்தியது தொடர்பாக தமிழ்நாடு குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத்தின் முன்பு ராஜகோபாலன், பத்ம சேஷாத்ரி பள்ளியின்  முதல்வர், தாளாளர், புகார் அளித்த மாணவிகள், முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் நேரடியாக ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர். 

The post ஆன்லைன் வகுப்பின் போது ஆபாசமாக படம் பிடித்து மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு!: ஆசிரியர் ராஜகோபாலனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக் தகவல்..!! appeared first on Dinakaran.

Tags : Rajagopalan ,Chennai ,Padma Seshadri ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...